மூன்று மாத விடுமுறைக்குப் பின்னர் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி தொடங்கியது. சென்ற வருடம் சுமார் 22 மாணவர்களுடன் சீடர் பார்க்கில் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், இந்த ஆண்டில் சுமார் 70 குழந்தைகள் பயின்று வருகிறார்கள். சீடர் பார்க், ரவுண்டு ராக், மற்றும் சவுத் ஆஸ்டின் மையங்களில் இந்த வகுப்புகள் நடந்து வருகின்றன. சுமார் முப்பது தன்னார்வ ஆசிரியர்கள் துணையுடன் இந்த பள்ளி ஆல விருட்சமாக வளர்ந்து வருகிறது.

இந்த பள்ளியில் சுமார் ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது வரை குழந்தைகள் படித்து வருகிறார்கள். குழந்தைகளின் வயதின் அடிப்படையில் வகுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு பின்பற்றப்படும் பாடப் புத்தகங்கள் அமெரிக்க தமிழ் அகடெமிக்கு உற்பட்டது.

குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் எழுத படிக்க கற்றுத் தருவதே ஆஸ்டின் தமிழ் பள்ளியின் நோக்கமாகும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோற்களின் ஒத்துழைப்புடனும் இயங்கி வரும் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளிக்கு ஆஸ்டின் வாழ் தமிழ் மக்கள் கொடுத்து வரும் ஊக்கம் மிகவும் பாராட்டிற்குரியது.